ஆறாவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற தகுதி சுற்றில் மும்பை அணியும், சென்னை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி இருபது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 82 ரன்களும், மைக் ஹசி 58 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 86 ரன்னும் எடுத்தனர். அடுத்து விளையாடிய மும்பை அணி 18.4 ஓவரில் மும்பை அணி 144 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் சென்னை அணி 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. சென்னை அணி 5வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|