|
|||||
நிலவில் விக்ரம் லேண்டரை இடமாற்றம் செய்து சாதனை. |
|||||
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் முடித்து, புதிய பரிசோதனையில் வெற்றி பெற்று ஓய்வு நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வில் இருக்கும் சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரை விஞ்ஞானிகளின் கட்டளைப்படி மீண்டும் இயக்க முடியுமா என இஸ்ரோ சோதிக்க முடிவு செய்தது.
அதன்படி செயலில் இறங்கிய இஸ்ரோ லேண்டரை இடம் மாற்ற கட்டளையிட்டது. கட்டளை கிடைத்ததும், அது என்ஜின்களை இயக்கி எதிர்பார்த்தபடியே 40 செ.மீ. உயரே எழுந்தது. பின்னர் சுமார் 30 முதல் 40 செ.மீ. தொலைவில் அது பாதுகாப்பாக தரையிறங்கி விஞ்ஞானிகளின் முயற்சிக்கு வெற்றியை பரிசளித்துள்ளது.
லேண்டரை இயக்கி கட்டளையை செய்வித்ததன் நோக்கத்துக்கும், முக்கியத்துவத்துக்கும் காரணம் என்ன தெரியுமா ? விக்ரம் லேண்டரை மீண்டும் மேலெழச் செய்து எதிர்காலத்தில் அங்கே ஆய்வு செய்து விட்டு பூமிக்கு திரும்புவதற்கும், மனிதர்களை அனுப்புவதற்கும் சோதிக்கப்பட்டது.
லேண்டரில் உள்ள அனைத்து சாதனங்களும் நன்றாக உள்ளன. சிறப்பாக செயல்படுகின்றன. இந்த வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு அதில் உள்ள ChaSTE, ILSA கருவிகள் மீண்டும் உள்ளே இழுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன.” என்று இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் முடித்து, புதிய பரிசோதனையில் வெற்றி பெற்று ஓய்வு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருக்கும் சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரை விஞ்ஞானிகளின் கட்டளைப்படி மீண்டும் இயக்க முடியுமா என இஸ்ரோ சோதிக்க முடிவு செய்தது.
|
|||||
by Kumar on 06 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|