LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

2023-ல் இதுவரை இல்லாத வகையில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆனது.

கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளது.

 

விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023-ம் ஆண்டில் உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கு விமானத்தில் பயணித்தோர் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளது.

 

இது இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர எண்ணிக்கை ஆகும். கரோனா பாதிப்புக்கு முன்பு 2019-ம் ஆண்டு உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.4 கோடி ஆக இருந்தது.

 

இண்டிகோ முதலிடம் பிடித்துள்ளது.

 

 

கடந்த 2020-ல் கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவையும் 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த ஆண்டில் விமான பயணிகள் எண்ணிக்கை 6.3 கோடியாக குறைந்தது. பின்னர் 2021-ல் 8.4 கோடி, 2022-ல் 12.3 கோடி என படிப்படியாக அதிகரித்துள்ளது.

 

 

கடந்த 2023-ல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 60.5 சதவீதத்துடன் இண்டிகோ முதலிடம் பிடித்துள்ளது. ஏர் இந்தியா (9.7%), விஸ்தாரா (9.1%), ஏஐஎக்ஸ் கனெக்ட் (7.2%) ஆகிய 3 நிறுவனங்களை உள்ளடக்கிய டாடா குழுமம் 26 சதவீதத்துடன் 2-ம் இடம் பிடித்தன. ஸ்பைஸ்ஜெட் 5.5%, ஆகாசா ஏர் 4.1%, பிற நிறுவனங்கள் 3.9% பங்கு வகித்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

by Kumar   on 17 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.