அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, குறைந்து வருவதால், இந்திய பொருளாதாரமும் சரிந்து கொண்டே வருகிறது. இதை தடுக்க, மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் பயன்பாட்டை குறைக்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கைமுர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும், அரவிந்த் குமார் சிங். இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள தன் வீட்டிலிருந்து, தினமும் அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார்; அரசு வாகனங்களையோ, தன் சொந்த வாகனங்களையோ அவர் பயன்படுத்துவதில்லை.அது போல், மாநில அரசு அதிகாரிகள், தங்களின் வாகனங்களை தவிர்த்து, பஸ், ரயில் போன்ற பொது பயன்பாட்டு வாகனங்களில் பயணம் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.முடிந்த வகையில் எல்லாம், பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறு, அன்புடன் கேட்டுக்கொண்டுள்ள இவர், இதனால் நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிப்பதுடன், பொருளாதாரமும் மேம்படும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவரைப் பார்த்து, மாவட்ட துணை போலீஸ் அதிகாரி, நிர்மலா குமாரியும், தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|