|
|||||
சென்னை- மைசூரு இடையே புல்லட் ரயில்: மத்திய அரசு திட்டம்! |
|||||
சென்னை - அரக்கோணம் - பெங்களூரு - மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில் இயக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரித்துள்ள ஜெர்மனி அரசு நிறுவனத்தால், 'இந்த திட்டத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும்' என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி, சென்னையில் இருந்து பெங்களூருக்கு, 100 நிமிடங்களில் செல்ல முடியும். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு, புல்லட் ரயில் இயக்கும் திட்டம், ஆசிய நாடான, ஜப்பானின் நிதிஉதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை - அரக்கோணம் - பெங்களூரு - மைசூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை, ஐரோப்பிய நாடான, ஜெர்மனி தயாரித்து உள்ளது. ரயில்வே துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள இந்த அறிக்கைபடி, 85 சதவீத புல்லட் ரயில் பாதை, தூண்கள் உதவியுடன், உயரத்தில் அமைக்கப்படும். 435 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாதையில், 11 இடங்களில், குகைகள் இடையே, புல்லட் ரயில் செல்லும். இந்த திட்டப்படி இயக்கப்படும், புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம், 320 கி.மீ., ஆக இருக்கும். புல்லட் ரயில் திட்டம், சென்னை - மைசூரு இடையிலான பயண நேரத்தை, மூன்றில் ஒரு பங்காக குறைக்கும். நாட்டில் தற்போது வழக்கத்தில் உள்ள பழைய ரயில் தடங்கள் அனைத்தையும், அதிவேக ரயில் பாதைகளாக மாற்ற வேண்டும்' என, ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 'இதற்கு, குறைந்த அளவு நிலம் கையகப்படுத்தினால் போதும்; செலவு கணிசமாக குறையும்' என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 25 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|