|
|||||
பாசந்தி |
|||||
தேவையானவை : சர்க்கரை - 200 கிராம் பால் - 1 லிட்டர் நெய் - அரை டீஸ்பூன் முந்திரி பருப்பு - 3 பிஸ்தா பருப்பு - 3 பாதாம் பருப்பு - 3 குங்கும பூ - சிறிதளவு செய்முறை : 1.முதலில் ஒரு பத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். 2.பால் ஆடை வர வர தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு வரவும். 3.ஒரு லிட்டர் பால் பாதியாக குறையும் போது அதிலும் பாதி பாலை எடுத்து வைத்த ஆடையின் மேல் ஊற்றவும். 4.இப்போது மீதி உள்ள கால் லிட்டர் பாலில் சர்க்கரையை போட்டு கரைந்ததும் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை போட்டு இதையும் ஏடு எடுத்து வைத்த பாத்திரத்தில் ஊற்றவும். 5.அதன் மேலே குங்கும பூ சிறிதளவு தூவி பிரிட்ஜில் வைத்து ஜில்லென பரிமாறவும். 6.இப்போது சுவையான பாசந்தி தயார். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|