இங்கு ஐயப்பன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சாகா மருந்தான அமிர்தம் வேண்டி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை
அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த திருமால், நல்லவர்களைக் காப்பாற்ற மோகினி வடிவம் எடுத்தார். இந்த
மோகினி வடிவத்துடன் இவ்வுலக நன்மை கருதி சிவபெருமான் இணைந்தார். அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார்.
அவரது மானிட அவதாரமான ஐயப்பன் பூவுலகில் அவதாரம் செய்தார். இந்த அவதாரமும் பங்குனி உத்திர நட்சத்திரம் சனிக்கிழமையில்தான் நிகழ்ந்தது.ஐயப்பன்
அவரது காலத்தில் போர்வீரனாக மதுரை பாண்டிய மன்னரிடம் "பாண்டிச்சேவகம்' புரிந்துள்ளார். அதன் நினைவாக ஐயப்பனுக்கு சபரிமலையில்
இருப்பதைப்போன்ற தோற்றத்தில் மதுரை விளாச்சேரி அருகில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அருள்பாலிக்கும் ஐயப்பன் ராஜதேஜஸ், சின்முத்தி ரையுடன்,
யோகாசனத்தில் யோக பட்டயம் அணிந்தும், வீராசனத்தில் வடமேற்கு திசையில் உள்ள சபரிமலையை பார்த்தபடியும் அமர்ந்திருப்பது சிறப்பாகும்
இங்கு ஐயப்பன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சாகா மருந்தான அமிர்தம் வேண்டி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த திருமால், நல்லவர்களைக் காப்பாற்ற மோகினி வடிவம் எடுத்தார். இந்த மோகினி வடிவத்துடன் இவ்வுலக நன்மை கருதி சிவபெருமான் இணைந்தார்.
அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது அவதாரமான ஐயப்பன் பூவுலகில் அவதாரம் செய்தார். இந்த அவதாரமும் பங்குனி உத்திர நட்சத்திரம் சனிக்கிழமையில்தான் நிகழ்ந்தது. ஐயப்பன் காலத்தில் போர்வீரனாக மதுரை பாண்டிய மன்னரிடம் "பாண்டிச்சேவகம்' புரிந்துள்ளார். ஐயப்பனுக்கு சபரிமலையில் இருப்பதைப்போன்ற தோற்றத்தில் மதுரை விளாச்சேரி அருகில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு அருள்பாலிக்கும் ஐயப்பன் ராஜதேஜஸ், சின்முத்தி ரையுடன், யோகாசனத்தில் யோக பட்டயம் அணிந்தும், வீராசனத்தில் வடமேற்கு திசையில் உள்ள சபரிமலையை பார்த்தபடியும் அமர்ந்திருப்பது சிறப்பாகும். |