|
|||||
குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல்- டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்! |
|||||
குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின் சபர்காந்த் மாவட்டத்தை சேர்ந்த 14 மாத குழந்தை கடந்த மாதம் 28ம் தேதி பீகார் வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் வடக்கு குஜராத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதையடுத்து அங்கு வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில்,` வன்முறை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். இதைத் தொடர்ந்து காந்திநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த குஜராத் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் அபிலாஷ குமாரி கூறியதாவது: குஜராத்தில் வசித்து வந்த இந்தி பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், இதையடுத்து அவர்கள் வெளியேறிய நிகழ்வு குறித்து மாநில தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு விளக்கம் கேட்டும், இது தொடர்பான அறிக்கையை 20 நாட்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 11 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|