LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

+2 பொதுத்தேர்வு இரத்து, மத்திய அரசு அறிவிப்பு

+2 பொதுத் தேர்வு இரத்து, மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கு கொண்டுவரப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இணைய வழி வகுப்புகள் மாணவர்களுக்கு நடைபெற்று வந்தன.
பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு முப்பது சதவிகிதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். அதில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  மே 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4-ஆம் தேதி தொடங்கி ஜூன் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் பரீட்சை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.இந்நிலையைக் கருத்தில் கொண்டுசி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் + 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித்துறை அறிவித்தது.
மீண்டும் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நடத்தப்பட ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்களால் வழக்கு தொடரப்பட்டது.
 + 2 பொதுத் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ,இந்நோய் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை தேர்வெழுத நிர்ப்பந்திக்கக் கூடாது விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் உரிய முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

by R.Gnanajothi   on 11 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.