LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

இதுவும் அறமே!

ஊரை விட்டு வந்த இடத்தில் ஊரடங்கு!

விடுதியில் தங்க வேண்டுமே பணம்?

வந்தேன் வீதிக்கு அதுதான் வீடு ஏழைக்கு!

ஊரில் சிலர் உணவளித்து உதவினர்!

ஒரு நாள் மழைக்கு, ஒதுங்க இடமில்லை!

நடை பாதை வாழ்க்கை நரகமானது!

கடை வாசலில் கிடை போடாதே என்று,

படுத்திருந்த இடத்தில் பரப்பினான் எந்திர எண்ணெயை!

குளிக்க இடமின்றி குடிக்க நீரின்றி,

கந்தலாடையையும் கசக்காமல் கட்டிக்கொண்டு,

கழிப்பறை இன்றி கழியும் நாட்கள்!

திறந்தவெளிக் கழிப்பிடம் தொற்று நோயின் இருப்பிடம்

தெரிந்தும் எனக்குத் தெரிய வில்லை ஒரு வழியும்

திக்கற்ற நகரில் திறந்த வெளியுமில்லை தேடியும் பயனில்லை

அடைபட்டுப் போனது அந்த வழியும்!

பெட்ரோல் பங்க்கிலாவது பயன்படுத்தலாமா கழிப்பறையை?

பணியாளர்கள் துரத்தினர் பார்த்தவுடன்

பல காத தூரங்களுக்கு சில பச்சை வண்ணக் கழிப்பிடங்கள்

பயன்பாடு இன்றி பளபளக்கும் பூட்டுகள்!

தூய்மை இந்தியாவா? துயர இந்தியாவா?

போக்கற்றவர்கள் எங்கே போவது?

என்று விடியும் என்வாழ்வு என்று ஏங்கி

ஏழையான என்னைக் கோழையாக்கி

மானம் இழந்து மன்றாடவைத்தது

உணவுக்காகக் கூட உதவி கேட்கவில்லை

கழிப்பறைக்காகக் கெஞ்சினேன் காலில் விழாக்குறையாக

உதவ மனமில்லை ஒரு சிலருக்கு

பேச்சுலர்ரூம் என்று புறம் தள்ளும் சமூகத்தில்

கழிப்பறை தந்து காத்தனர் இளைஞர்கள்

கழிப்பறையை பகிர்ந்து கொள்ளும் காலமும் வருமா?

ஒவ்வொரு தெருவுக்கும் வருமா ஒரு பொதுக் கழிப்பறை?

இல்லை என்ற நிலை இல்லது போகுமா கழிப்பறைக்காவது?

உண்ண உணவும் பருக நீரும் கொடுப்பது மட்டுமா அறம்?

கழிப்பறையைப் பகிர்வதும் அறம் தானே?

பிச்சைக்கார வாழ்க்கை புரியவைத்த பொதுவுடைமை!

 

--சடகோபன் வேணுகோபால் 

by Sadagopal Venugopal   on 09 May 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.