LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிப்பு.

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 277 ராணுவ வீரர்களுக்கு கேலண்ட்ரி விருதுகள் வழங்கப்பட இருப்பதாக உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலண்ட்ரி விருதுகள் ஒரு வருடத்தில் இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது.

 

அதாவது வீரதீர செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 277

கேலண்ட்ரி விருதுகள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்படவுள்ளது. அதில், மாவோஸ்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி, வீரதீர செயல்கள் புரிந்த 119 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கேலண்ட்ரி விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பாக பணியாற்றிய 133 பேருக்கும், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த 25 பேருக்கும் இந்த கேலண்ட்ரி விருதுகள் வழங்கப்படவிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு 275 காவல் துறையினருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 72 காவலர்களும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 காவலர்களும், சத்தீஸ்கரைச் சேர்ந்த 26 காவலர்களும் தேர்வாகியுள்ளனர். மேலும் ஜார்கண்டில் இருந்து 23 பேரும், ஒடிசாவைச் சேர்ந்த 15 பேரும் விருது பெற தேர்வாகியுள்ளனர். அதோடு, டெல்லியைச் சேர்ந்த 8 காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 65 பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

 

இவர்களைத் தவிர, எல்லை பாதுகாப்புப் படையான சசாஸ்த்ர சீமா பாலைச் சேர்ந்த 21 பேருக்கும் விருது வழங்கப்படவுள்ளது. சஷாஸ்த்ரா சீமா பால் என்பது நேபாளம் மற்றும் பூட்டான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் எல்லைக் காவல் படையாகும். உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏழு மத்திய ஆயுதக் காவல் படைகளில் இதுவும் ஒன்றாகும்.

 

காங்கோவில் ஐநா சார்பில் அமைதியை நிலைநாட்டும் படையில் சிறப்பாக பணியாற்றிய பாதுகாப்பு படை படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கும் இந்த விழாவில் விருதுகள் Police Medal for Gallantry (PMG) வழங்கப்படவுள்ளது. மேலும் 102 வீரர்களுக்கு குடியரசு தலைவர் சிறப்பு சேவைக்கான விருதுகளும், 94 காவல்படை வீரர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் தீயணைப்பு துறையில் சிறப்பாக செயல்பட்ட நான்கு வீரர்களுக்கும், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய நான்கு வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

by Kumar   on 25 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.