|
||||||||
அமர்த்தபலம் (amrita palam) |
||||||||
தேவையானவை : புழுங்கல் அரிசி - ஒரு கப் தேங்காய் துருவல் - ஒரு கப் மோர் - 3 கப் பச்சை மிளகாய் - 3 பெருங்காயம் - அளவு கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒருடீஸ்பூன் கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 உப்பு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்கவும். 2.பின்பு ஊற வைத்த அரிசி அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். 3.பின்பு அதனுடன் மோர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். 4.ஒரு கடையில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, தாளித்து அதனுடன் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை, மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு ஒரு முறை வதக்கவும். 5.பின்பு அதில் மோருடன் கலந்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 6.கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதனுடன், 5 நிமிடம் நன்கு கிளறவும். 7.கட்டியனதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும். 8.ஒரு ஈரதுணியில் செய்து வைத்திருக்கும் அமர்த்தபலத்தை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து துணியில் வட்டமாக வடை போல் தட்டவும். 9.ஈரத்தை துணி உறிஞ்சியதும் ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொத்தமல்லி தழையை வைத்து பரிமாறவும்.. |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|