LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

அமர்த்தபலம் (amrita palam)

தேவையானவை :


புழுங்கல் அரிசி - ஒரு கப்

தேங்காய் துருவல் - ஒரு கப்

மோர் - 3 கப்

பச்சை மிளகாய் - 3

பெருங்காயம் - அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒருடீஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

உப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை:


1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

2.பின்பு ஊற வைத்த அரிசி அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

3.பின்பு அதனுடன் மோர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.

4.ஒரு கடையில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, தாளித்து அதனுடன் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை, மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு ஒரு முறை வதக்கவும்.

5.பின்பு அதில் மோருடன் கலந்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

6.கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதனுடன், 5 நிமிடம் நன்கு கிளறவும்.

7.கட்டியனதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.

8.ஒரு ஈரதுணியில் செய்து வைத்திருக்கும் அமர்த்தபலத்தை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து துணியில் வட்டமாக வடை போல் தட்டவும்.

9.ஈரத்தை துணி உறிஞ்சியதும் ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொத்தமல்லி தழையை வைத்து பரிமாறவும்..

by vaishnavi   on 28 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.