LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக சாதித்த தமிழ் பெண்

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன்  திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர், தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான்நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியை சேர்ந்தவர்.  ஷேக் மீரான்- சைத்தூன் பீவி தம்பதியின் மகள்.  செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி, பிளஸ்-2 தேர்வில் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். பின்னர், நெல்லை அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த இவர், மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்று இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.
'ஆதித்யா எல்-1' விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விஞ்ஞானி நிகர் ஷாஜி தனது பணியை திறம்பட செய்து பாராட்டு பெற்றுள்ளார்.  இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய கூட்டமைப்பை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் 4-வது நாடாக இந்தியா சாதனை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
இந்நிலையில், விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான 'ஆதித்யா எல்-1' திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் ஷாஜி தலைமை பொறுப்பேற்றிருப்பதை பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன்  திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர், தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான்நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியை சேர்ந்தவர்.  ஷேக் மீரான்- சைத்தூன் பீவி தம்பதியின் மகள். 

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி, பிளஸ்-2 தேர்வில் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். பின்னர், நெல்லை அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த இவர், மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்று இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.


'ஆதித்யா எல்-1' விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விஞ்ஞானி நிகர் ஷாஜி தனது பணியை திறம்பட செய்து பாராட்டு பெற்றுள்ளார்.  இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய கூட்டமைப்பை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் 4-வது நாடாக இந்தியா சாதனை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

 
விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான 'ஆதித்யா எல்-1' திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் ஷாஜி தலைமை பொறுப்பேற்றிருப்பதை பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

by Kumar   on 04 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.