|
|||||
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக சாதித்த தமிழ் பெண் |
|||||
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர், தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான்நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியை சேர்ந்தவர். ஷேக் மீரான்- சைத்தூன் பீவி தம்பதியின் மகள். செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி, பிளஸ்-2 தேர்வில் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். பின்னர், நெல்லை அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த இவர், மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்று இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.
'ஆதித்யா எல்-1' விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விஞ்ஞானி நிகர் ஷாஜி தனது பணியை திறம்பட செய்து பாராட்டு பெற்றுள்ளார். இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய கூட்டமைப்பை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் 4-வது நாடாக இந்தியா சாதனை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
இந்நிலையில், விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான 'ஆதித்யா எல்-1' திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் ஷாஜி தலைமை பொறுப்பேற்றிருப்பதை பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி, பிளஸ்-2 தேர்வில் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். பின்னர், நெல்லை அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த இவர், மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்று இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.
|
|||||
by Kumar on 04 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|