LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தனிநபர் புரட்சியால் உருவான 1,360 ஏக்கர் வனச் சரணாலயம்!.

ஜாதவ் பயேங் - இவர்தான் ‘Forest Man of India’ என்ற பெருமைக்கு உரியவர். இவர் அசாமில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஒரு அடித்தட்டு விவசாயியாகத் துவங்கிய இவரது இந்தப் பயணம் இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.

 

1,360 ஏக்கர் வனச் சரணாலயம்

 

ஜாதவ் பயேங்கின் இந்த சுற்றுச்சூழல் அறப்போராட்டமானது, 1979ம் ஆண்டு தொடங்கியது. ஜாதவ் தன்னுடைய 16-வது வயதில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தின் பேரழிவைக் கண்டார். மேலும், இந்த வெள்ளப் பாதிப்பின் தாக்கமானது, வன விலங்குகளையும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கியது.

 

பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஒரு தரிசு மணல்

 

வெள்ளத்தினால் இழந்த வாழ்விடத்தை மீட்டெடுக்கவும், விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானித்த கையிலெடுத்த ஜாதவ், பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஒரு தரிசு மணல் பரப்பில் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடங்கினார்.

 

தன்னுடைய முழு மன உறுதியுடன் வெறும் 20 மூங்கில் நாற்றுகளை மட்டுமே விதைத்துள்ளார். பின்னர் அதுவே, 1,360 ஏக்கர் வனச் சரணாலயமாக மாறுவதற்கான விதையாக மாறியுள்ளது.

 

ஒரு காலத்தில் வெட்டவெளி மணற்பரப்பாக இருந்த இந்த இடங்கள் தற்போது ஜாதவின் இடைவிடாத முயற்சியால் பசுமையான வனமாக மாறி உள்ளது. மேலும், இது வன விலங்குகள் மற்றும் பல்லுயிர் வளம் கொண்ட செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பாகவும் மலர்ந்துள்ளது. இந்த வனச்சரகம் ஜாதவின் நினைவாக, ‘மோலாய் காடு’ எனப் பெயரிடப்பட்டு யானைகள், மான்கள், காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் உள்ளிட்ட பல விலங்குகளுக்கான சரணாலயமாக விளங்குகிறது.

 

 ஜாதவ் பயேங்கின் இந்த அசாதாரண முயற்சி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது மற்றும் ‘காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட்’ விருது போன்ற மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

ஜாதவின் உத்வேகமான வாழ்க்கைக் கதை பல எல்லைகளைத் தாண்டி, இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

by Kumar   on 07 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.