LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்திய ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு

உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்திய ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு
வள்ளுவர் அரங்கம்-கரூர் - 25.03.2023 - சனிக்கிழமை
மற்றும்
உலகத் தமிழ்க்காப்புக் கூட்டியக்கம்
நடத்தும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எழுச்சி மாநாடு 10.06.2023 சனிக்கிழமை அருள்மிகு காசி விநாயகர் ஆலயம் இராசிபுரம் ஆகிய இரண்டு மாநாடுகளிலும் நிறைவேற்றப்பட்ட மாநாட்டுத் தீர்மானங்கள்.

மாநாட்டுத் தீர்மானங்கள்:
1. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் மாண்புமிகு நீதியரசர் திரு.ந.கிருபாகரன் மற்றும் மாண்புமிகு நீதியரசர் திரு.பி.புகழேந்தி ஆகியோர் அமர்வு 19.08.2021-ஆம் நாள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அனைத்துக்கோயில்களிலும் தமிழிலேயே குடமுழுக்குச் செய்வதற்கான வழிமுறைகளை வகுத்தளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை விரைவில் பெற்றுச் சட்டமியற்றவோ / அரசாணை வெளியிடவோ வேண்டுமெனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வதென ஒருமனதாக இம்மாநாடு திர்மானிக்கிறது. சட்டம் இயற்றுவதாயின் சட்டமன்றத்தின் தற்போதைய கூட்ட அமர்வு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே இச்சட்டத்தை இயற்றுமாறும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

2. கோயில் கட்டியவன் எந்தமிழன், கற்சிலை செய்தவன் எந்தமிழன், வாயில்காப்பவன் எந்தமிழன் ஆனால் வழிபாட்டுமொழியாய்த் தமிழ் இல்லை. அனைத்துநிலைத் திருக்கோயில்களிலும் வழிபாட்டுச் சடங்குகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெறவேண்டுமென அரசாணை வெளியிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

3. உலகத்தில் பலநாடுகளில் இருப்பது போலவும் இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போலவும் பள்ளிக் கல்வி முழுவதும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தாய் மொழியாகிய தமிழ்மொழி வாயிலாகவே கற்பிக்கப்படவேண்டும். மாநிலப் பாடத்திட்டம், தேசியப் பாடத்திட்டம், பன்னாட்டுப்பாடத்திட்டம் உட்பட தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்துப் பாடத்திட்டப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

4. கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிலைக் கல்லூரிகளிலும் முதற்கட்டமாக அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் ஒரு பாடமாக வைக்கப்படவேண்டும். அதேவேளையில் போதுமான கலைச் சொற்கள் இருக்கிற துறைகளில் தமிழ்வழியில் கல்விகற்பிக்கப் பாடத்திட்டங்களை தொடர்ச்சியாகக் கலைச்சொல்லாக்கப் பணி நடைபெற்று அனைத்து வகைக் கல்லூரிகளிலும் தமிழே பயிற்றுமொழியாக ஆக்கப்படவேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. உருவாக்கவேண்டும்.

5. அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்வேறு துறைசார்ந்த அரசு ஆணைகள், திட்டங்கள், தீர்மானங்கள், செயல்முறைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டுமென்ற கொள்கைமுடிவை எடுத்து கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

6. வழக்குத் தொடுப்பவன் செந்தமிழன் தொடுக்கப்படுபவன் செந்தமிழன்; வழக்கை நடத்தும் வழக்கறிஞர் அத்தனைபேரும் எந்தமிழர். என்ன கொடுமை வழக்காடு மொழியாய்த் தமிழ் இல்லை. எனவே, ஒருசில மாநலங்களில் இருப்பது போல தமிழே வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமென ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுகொள்ளத் தீர்மானிக்கிறது.

7. எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாகவும், அலுவலக மொழிகளாகவும் அறிவிக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

8. திருமணவிழா, கால்கோள் விழா, புதுமனை புகுவிழா, நிறுவனத் திறப்பு விழா, திருக்குடமுழுக்கு விழா, பூப்புனித நன்னீராட்டு விழா, திருமண உறுதி ஏற்பு விழா, வளைகாப்பு விழா, பெயர் சூட்டு விழா, பிறந்தநாள் விழா, காதணி விழா, எழுத்தாணிப்பால் விழா, ஆண்டு விழா, வெள்ளி விழா, பொன் விழா, மணி விழா, பவள விழா, முத்து விழா, நூற்றாண்டு விழா, இயற்கை எய்தல், நினைவேந்தல், படத்திறப்பு, நீத்தார் நினைவு அனைத்து வாழ்வியல் சடங்குகளையும் தமிழிலேயே செய்யவேண்டுமென்று மக்களையும், மாநில அரசையும், கேட்டுக்கொள்வதெனத் தீர்மானிக்கிறது.

9. வணிக நிறுவனங்களின் முகப்புப் பலகைகளில் தமிழ்தான் முதலிடம் பெற வேண்டுமென அரசாணை இருந்தும்கூட நடைமுறைப்படுத்தாத நிறுவனங்களின்மீது உரிய நடவடிக்கை எடுக்க கடுமையான அறிவிப்பை வெளியிட்டு அதைக் கண்காணிக்கும் பொறுப்பைத் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பும், தமிழ்வளர்ச்சி இயக்கமும் இணைந்து செயலாற்றுமாறு அரசாணை வெளியிட்டு வேகப்படுத்துமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்ள ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

10. திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பை (UNESCO) கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. அதற்கான அழுத்தத்தை ஒன்றிய அரசும், தமிழ்நாட்டு அரசும் தரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்ள ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

11.1330 திருக்குறளையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி மலையில் தனித்தனியாகக் கல்வெட்டாகப் பதிவுசெய்ய ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவு படுத்துமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

12. பல தமிழ்க்கவிஞர்களுக்கு ஒன்றிய அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக திருவள்ளுவர், கம்பர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார், வேதாந்த தேசிகள், வ.உ.சி, கவிமணி, செய்குத்தம்பி பாவலர், நாமக்கல் கவிஞர், பாரதியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், வாரியார், கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பாவாணர் ஆகியோர் ஆவார். வடமொழி பாணினிக்கும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஒல்காப்புகழ் அஞ்சல் தலை தொல்காப்பியருக்கும் ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பிக்கவேண்டுமென்றும் அதுவும் வரும் சித்திரை ஒன்றாம் நாள் ஒன்றிய அரசைக் வெளியிட்டுச் சிறப்பிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

13.சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் சிலைகளுக்கு மாலையிடவேண்டும் என அரசாணை இருக்கிறது. சித்திரை மாதத்தில் பிறந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை கவிஞர்கள் தினமாக அரசாணை 2022-ஆம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதற்கான அரசாணை ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரை மாதத்தைத் தொல்காப்பியர் மாதமாக அறிவிக்குமாறு ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

14.தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புக்களில் தமிழ்வழியில் கல்விகற்றோருக்கு அதிக விழுக்காடு தனி ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

15.ஊடகங்களில் கலப்பற்ற தமிழ், பேசப்படுவதற்கு மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் இருப்பதுபோல ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க ஒன்றிய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

16. தமிழில் பெயர் சூட்டுதல், பெயரின் முதல் எழுத்தைத் தமிழிலேயே வைப்பது போன்றவற்றை அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். தமிழ்ப் பெயர் தாங்கிப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கலாமெனவும், இம்மாநாடு அரசுக்குப் பரிந்துரை செய்ய ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

17. வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டுக்கும். தமிழ்நாட்டின் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கும் செல்லும் அனைத்து வானூர்திகளிலும் தமிழிலேயே அறிவிப்புச் செய்யவேண்டுமென அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

18. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்குமான கடிதத்தொடர்புகள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலேயே இருக்கவேண்டுமென ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்வதென இம்மாநாடு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

19. ஒட்டுமொத்தமாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை முழுவதுமாக நடைமுறைப்படுத்தும் வரை இம்மாநாட்டில் கலந்துகொண்டோர் உட்பட உலகத் தமிழர் அனைவரும் தன்னை இழந்தாவது தமிழைக்காப்பதென இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

கரூர்
25.03.2023
முனைவர்.சி.சுப்பிரமணியம்
தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் உலகத் தமிழ்க்காப்புக் கூட்டியக்கம்.
கைபேசி எண்கள்: 97888-26444, 97888-20444.

by Swathi   on 21 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராசாவிடம்  எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன் இளையராசாவிடம் எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன்
பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில் பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில்
மூன்றாவது உலகத்தமிழ் மாநாட்டில் திரு. கருணாநிதி ஆற்றிய உரையும் , கோரிக்கைகளும் மூன்றாவது உலகத்தமிழ் மாநாட்டில் திரு. கருணாநிதி ஆற்றிய உரையும் , கோரிக்கைகளும்
இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை,கோரிக்கைகளும் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை,கோரிக்கைகளும்
19 தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள்  -முனைவர்.தஞ்சை. பா. இறையரசன் 19 தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் -முனைவர்.தஞ்சை. பா. இறையரசன்
தமிழ் வளர்ச்சித்துறைக்கு பிற துறை பொறுப்புகள் இல்லாத தனி அமைச்சரை நியமிக்கவேண்டுமதமிழ்-வளர்ச்சித்துறைக்கு-பிற-துறை-பொறுப்புகள்-இல்லாத-தனி-அமைச்சரை-நியமிக்கவேண்டும் தமிழ் வளர்ச்சித்துறைக்கு பிற துறை பொறுப்புகள் இல்லாத தனி அமைச்சரை நியமிக்கவேண்டுமதமிழ்-வளர்ச்சித்துறைக்கு-பிற-துறை-பொறுப்புகள்-இல்லாத-தனி-அமைச்சரை-நியமிக்கவேண்டும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.