இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தின் பிரக்ஞானந்தா உலக அளவில் இரண்டாம் இடம்
பிரக்ஞானந்தா என அறியப்படும் இரமேஷ்பாபு பிரக்ஞானந்தா தமிழ்நாட்டின் சென்னைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை இரமேஷ்பாபு மற்றும் தாயார் நாகலட்சுமி.இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற ஐந்தாவது வீரர் மற்றும் சதுரங்க உலகத் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்சனை வென்ற முதல் இளம் வீரர் ஆவார். மாக்னஸ் கார்ல்சனை 2022 பிப்ரவரி 22,2022 மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் வென்றுள்ளார்.இருமுறை நார்வேயின் கார்ல்சனை வென்றவர் பிரக்ஞானந்தா. தற்போது நடைபெற்ற 2022 சதுரங்க உலகக்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் இத்தமிழ்மகன்.
சதுரங்க உலகக்கோப்பை 2023 அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பக்கூ பகுதியில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் கலந்து கொண்டனர். அனைத்து சுற்றுகளிலும் முன்னேறிய பிரக்ஞானந்தா மூன்றாவது சுற்றில் 34-வது தரவரிசை வீரர் டேவிட் நவாராவையும், நான்காவது சுற்றில் இகாரு நகமுராவையும், பெரன்ஸ் பெர்க்ஸ் என்ற வீரரை ஐந்தாவது சுற்றிலும் அர்ஜுன் எரிகாய்சி என்ற வீரரை காலிறுதியிலும், தரவரிசையில் இரண்டாவதாக உள்ள பபியோனா கருவானாவை அரை இறுதியிலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரர் மற்றும் இந்தியாவிலேயே உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இளம்வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இறுதிச்சுற்று இரண்டு ஆட்டங்களும் சமநிலையில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற Tie-Breaker ஆட்டத்தில் 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் கார்ல்சன் வென்றார். பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாவது இடம் பெற்றார்.
|