|
|||||
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டில் 5 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் |
|||||
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், 2023-ம் ஆண் டில் மிக அதிகபட்சமாக 5 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். கோவேந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு அதிக பட்சமாக 5 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு 4.83 லட்சம் பாஸ்போர்ட் கள் வழங்கப்பட்டன. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களின் கடின உழைப்பால் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதத்தில் சென்னையில் பாஸ்போர்ட்கள் மீதான காவல்துறை சரிபார்ப்பு விசாரணை மேற்கொள்ள 8 முதல் 10 நாட்கள் வரை ஆனது.
20 ஆயிரம் குறைகளுக்குத் தீர்வு
இது தற்போது 3 முதல் 4 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காதது உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தால் அவை வழங்காமல் நிலுவையில் இருந்தால், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரர்கள் எவ்வித முன் அனுமதியும் இன்றி சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் நேரிடையாக வந்து ஆலோசனை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், விண் ணப்பதாரர்களின் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட்டன.
2024 ஜன.1 முதல் சென்னையில் உள்ள சாலிகிராமம், அமைந்தகரை, தாம் பரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் தட் கல் மூலம் பாஸ்போர்ட்பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டில் தொலைப்பேசி, இ-மெயில், வாட்ஸ்- அப், ட்விட்டர் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் மூலம் பாஸ் போர்ட் தொடர்பாக 20 ஆயிரம் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் |
|||||
by Kumar on 31 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|