LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டில் 5 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம்

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், 2023-ம் ஆண் டில் மிக அதிகபட்சமாக 5 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். கோவேந்தன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு அதிக பட்சமாக 5 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு 4.83 லட்சம் பாஸ்போர்ட் கள் வழங்கப்பட்டன. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களின் கடின உழைப்பால் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதத்தில் சென்னையில் பாஸ்போர்ட்கள் மீதான காவல்துறை சரிபார்ப்பு விசாரணை மேற்கொள்ள 8 முதல் 10 நாட்கள் வரை ஆனது.

 

20 ஆயிரம் குறைகளுக்குத் தீர்வு 

 

இது தற்போது 3 முதல் 4 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காதது உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தால் அவை வழங்காமல் நிலுவையில் இருந்தால், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரர்கள் எவ்வித முன் அனுமதியும் இன்றி சென்னை, அண்ணாசாலை, ராயலா டவர்ஸ் கட்டிடத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் நேரிடையாக வந்து ஆலோசனை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், விண் ணப்பதாரர்களின் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட்டன.

 

2024 ஜன.1 முதல் சென்னையில் உள்ள சாலிகிராமம், அமைந்தகரை, தாம் பரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் தட் கல் மூலம் பாஸ்போர்ட்பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டில் தொலைப்பேசி, இ-மெயில், வாட்ஸ்- அப், ட்விட்டர் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் மூலம் பாஸ் போர்ட் தொடர்பாக 20 ஆயிரம் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

by Kumar   on 31 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.