|
|||||
1920 முதல் 1923 வரை தேர்தல் |
|||||
அரசாங்கப் பதவிகளுக்காக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன "தேர்தல்" முறை, 17ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை. அந்தக் கால
கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்தது.ஐக்கிய இராஜ்ஜியம் ச்சியம் மற்றும்
அமெரிக்க ஐக்கிய நாடு போன்றவற்றில் ஆரம்ப காலத் தேர்தல்களை நிலக்கிழார்கள் அல்லது ஆளும் வர்க்க ஆண்கள் போன்றோரே
ஆக்கிரமித்திருந்தனர்.இருப்பினும், 1920ஆம் ஆண்டு அளவில் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க குடியாட்சிகள் அனைத்தும் ஆண்கள் அனைவருக்கும்
வாக்குரிமை வழங்கிவிட்டன. பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைப் பற்றியும் யோசிக்கத் துவங்கின.
தேர்தல்:எந்த அரசுப் பதவிகளுக்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பது இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற
ஒரு பிரதிநிதித்துவ குடியாட்சியில், சில பதவிகள், குறிப்பாக, ஓரளவு தகுதி அல்லது விசேடத் திறமை தேவையாக இருப்பவை, தேர்தல் மூலம்
நிரப்பப்படுவதில்லை. உதாரணமாக நீதிபதிகள் அவர்களது பாரபட்சமின்மையைப் பாதுகாப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்படாது நியமிக்கப்படுகின்றனர்.
இருப்பினும், இந்த வழக்கத்திற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பண்டைய
ஏதென்ஸ் நகரில் இராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தல் வகைகள்: புவியியல் ரீதியான அதிகார எல்லை ஆகியவற்றைப் பொறுத்து,
பல்வேறு வகைப்பட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன.சில பொதுவான தேர்தல் வகைகள்,குடியரசுத் தலைவர் தேர்தல்,பொதுத் தேர்தல்,முதன்மைத்
தேர்தல்,இடைத் தேர்தல்,உள்ளுர் தேர்தல்,நியமனத் தேர்வு ஆகும்.1920யில் தேர்தல்:இரட்டை ஆட்சிமுறையின் கீழ் சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் 1920
இல் நடைபெற்றது. பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி:சென்னை நகரில் பிறந்த ராஜகோபாலாச்சாரி சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக்
கல்லூரியிலும் படித்தார். இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி சென்னையின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் இந்தியத் தலைவராக
டிசம்பர் 17, 1920ம் ஆண்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1923ல் பனகர் அரசரின் நீதிக்கட்சி அரசுக்கு எதிராகக்
கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தூண்டுகோலாக இவர் இருந்தார் என்றும் கருதப்படுகிறது. 1923 இல் இவரது பதவிக்காலம் முடிவுக்கு
வந்தபின் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை சட்டமன்றத் தலைவரானார். இராஜகோபாலாச்சாரி லண்டனில் உள்ள இந்தியக் கவுன்சிலின் உறுப்பினராக
நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றியபின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா திரும்பினார். 1927ல் மரணமடைந்தார்.அகாலி
தளம்:அகாலி தளம் என அழைக்கப்படும் சிரோன்மணி அகாலி தளம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும்
சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. 1920ல் சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி
ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார்.இந்தியப் பொதுவுடமைக் கட்சி:ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற
பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத்
தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான
கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கத் தெடங்கினார்கள்.1920களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் வழிகாட்டலில் ஒன்று
சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. இந்தக் கட்சிகள் மூலமாகவும் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மூலமாகவும் விவசாயிகள்,
தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த கர்னி-காம்கார் யூனியன் மூலம் நடந்த கூலி உயர்வுக்கான
போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர்.
அரசாங்கப் பதவிகளுக்காக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன "தேர்தல்" முறை, 17ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை. அந்தக் கால கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்தது.ஐக்கிய இராஜ்ஜியம் ச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு போன்றவற்றில் ஆரம்ப காலத் தேர்தல்களை நிலக்கிழார்கள் அல்லது ஆளும் வர்க்க ஆண்கள் போன்றோரே ஆக்கிரமித்திருந்தனர்.இருப்பினும், 1920ஆம் ஆண்டு அளவில் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க குடியாட்சிகள் அனைத்தும் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிவிட்டன. பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைப் பற்றியும் யோசிக்கத் துவங்கின.
தேர்தல்:
எந்த அரசுப் பதவிகளுக்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பது இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு பிரதிநிதித்துவ குடியாட்சியில், சில பதவிகள், குறிப்பாக, ஓரளவு தகுதி அல்லது விசேடத் திறமை தேவையாக இருப்பவை, தேர்தல் மூலம் நிரப்பப்படுவதில்லை. உதாரணமாக நீதிபதிகள் அவர்களது பாரபட்சமின்மையைப் பாதுகாப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்படாது நியமிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த வழக்கத்திற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பண்டைய ஏதென்ஸ் நகரில் இராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் வகைகள்:
புவியியல் ரீதியான அதிகார எல்லை ஆகியவற்றைப் பொறுத்து, பல்வேறு வகைப்பட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன. சில பொதுவான தேர்தல் வகைகள்,குடியரசுத் தலைவர் தேர்தல்,பொதுத் தேர்தல்,முதன்மைத்
1920யில் தேர்தல்:
இரட்டை ஆட்சிமுறையின் கீழ் சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் 1920 இல் நடைபெற்றது.
பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி:
சென்னை நகரில் பிறந்த ராஜகோபாலாச்சாரி சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி சென்னையின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் இந்தியத் தலைவராக டிசம்பர் 17, 1920ம் ஆண்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1923ல் பனகர் அரசரின் நீதிக்கட்சி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தூண்டுகோலாக இவர் இருந்தார் என்றும் கருதப்படுகிறது. 1923 இல் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தபின் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை சட்டமன்றத் தலைவரானார். இராஜகோபாலாச்சாரி லண்டனில் உள்ள இந்தியக் கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றியபின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா திரும்பினார். 1927ல் மரணமடைந்தார்.
அகாலி தளம்:
அகாலி தளம் என அழைக்கப்படும் சிரோன்மணி அகாலி தளம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. 1920ல் சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார்.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி:
ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கத் தெடங்கினார்கள்.1920களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. இந்தக் கட்சிகள் மூலமாகவும் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த கர்னி-காம்கார் யூனியன் மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர். |
|||||
by Swathi on 24 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|