|
|||||
142 ரோஹிங்கயா அகதிகளைக் காப்பாற்றிய இந்திய அதிகாரிகளுக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டு. |
|||||
அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் 142 ரோஹிங்கயா காப்பாற்றியதற்காக அகதிகளை இந்திய அதிகாரிகளுக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு திங்கள்கிழமை பாராட்டி நன்றி தெரிவித்தது.
மியான்மரின் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை அந்நாட்டு ராணுவம் கடந்த 2017- மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையில் ரோஹிங்கயா சமூகத்தினர் மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
கடலோரக் காவல்படை
கடந்த இரு வாரங்களுக்கு வங்கதேசத்திலிருந்து முன்பு 47 பெண்கள், 59 குழந்தைகள் உள்பட 142 ரோஹிங்கயா அகதிகள் இந்தோனேசியாவுக்குக் கடல்வழியே ஆபத்தான முறையில் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் உள்ள ஷாஹீத் தீவுக்கு அருகே சந்தேகத்துக்குரிய படகு ஒன்று பயணிப்பதாக போர்ட் பிளேர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரக் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து அகதிகளின் படகைத் தடுத்து நிறுத்தினர்.
அந்தப் படகை ஆய்வு செய்தபோது, அதில் சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் படகில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால், அதில் பயணித்த அகதிகள் அனைவரும் போர்ட் பிளேருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆபத்தில் இருந்தவர்களுக்கும் நிவாரணம்
இந்தியக் கடலோரப் பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டி நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியா- பசிபிக் செய்தித் தொடர்பாளர் பாபர் பலோச் கூறுகையில், 'அகதிகளைக் காப்பாற்றிய இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட முகமைகளின் அதிகாரிகளுக்கு அகதிகள் நல அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மனிதநேய அடிப்படையில் மேற்கொண்ட இந்த முயற்சி ஆபத்தில் இருந்தவர்களுக்கும் நிவாரணம் அளித்துள்ளது' என்றார். |
|||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|