LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

12 மாதங்களில் 12 விண்வெளித் திட்டங்கள் – இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

2024 ஆம் ஆண்டில் 12 மாதங்களில் 12 விண்வெளி திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார் .

 

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய 2 திட்டத்தின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்துள்ள இந்தியா உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பொக்கிஷங்களின் ஒன்றான இஸ்ரோ தற்போது மேலும் பல செயற்கைக்கோள்களைத் தயாரித்து விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

 

அந்தவகையில் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா-வை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-58 என்ற ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

 

கூடுதலாக செயலாற்ற முடியும்

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் 01/01/2024 காலை சரியாக 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது :

 

இந்தாண்டின் 12 மாதங்களில் 12 விண்வெளி திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் பரிசோதனைகள் சரியாக நடந்தால் நிர்ணயிக்கப்பட்டதை விடக் கூடுதலாகவும் செயலாற்ற முடியும் என நம்பிக்கை உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

by Kumar   on 04 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.